அம்மா
குரு அரவிந்தன்
காலை நேரம் மெல்ல அணைத்து
என்னை எழுப்பும் அம்மா
சாலை ஓரம் ஒதுங்கி நின்று
பள்ளி அனுப்பும் அம்மா!
படிக்கும் போது பக்குவமாய்ச்
சொல்லிக் கொடுக்கும் அம்மா
உண்ணும் உணவை ஆசையோடு
ஊட்டிவிடும் அம்மா!
தவறு செய்தால் கனிவுடனே
திருத்திவிடும் அம்மா
இரவு வேளை கதைகள் சொல்லி
உறங்க வைக்கும் அம்மா!
Comments
Post a Comment